Local ·

வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

வேலை நிறுத்த போராட்டம் இடைநிறுத்தம்

October 31 (Citizen.lk News) - நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எற்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

Read next

KIU பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட சமீபத்திய காலமுறை நிறுவன மீளாய்வில் அதிகூடிய புள்ளிகள் சதவீதத்தை பெற்று சாதனை