March 05 (Citizen.lk News) - கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (04) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காணாமல் போனவர் வத்தளை - மாபோல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.