February 10 (Citizen.lk News) - திட்டமிட்டபடி, இந்திய - பாகிஸ்தான் போட்டி பெப்ரவரி 15,ல் கொழும்பில் பெப்ரவரி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான 2026 ரி20 உலகக் கிண்ண குழுப் போட்டியைப் பகிஷ்கரிக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெற்றுள்ளது.
'எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்காக அணியை களமிறங்க அனுமதித்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் X இல் ஒரு பதிவை வெளியிட்டது.
ரி20 உலகக் கிண்ணத்தில் நிதி ரீதியாக மிகவும் லாபகரமான போட்டியான இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பகிஷ்கரிக்கப் போவதாக பாகிஸ்தான் விடுத்த அச்சுறுத்தலைத் திரும்பப் பெறுவதற்காக, கடந்த சில நாட்களாக PCB, BCB மற்றும் ICC இடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருவதாக திங்களன்று செய்தி வெளியிட்டிருந்தது.